Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

பேரறிவாளனுக்கு 7-வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு :

பேரறிவாளனுக்கு 7-வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை சேர்ந்தவர் பேரறிவாளன். இவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு வீட்டில் இருந்து சிகிச்சையளிக்க வேண்டும்.

எனவே, பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.அதன்பேரில் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த மே 28-ம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டைக்கு அழைத்துவரப்பட்டார்.

அதன்பின் சிறுநீரக தொற்று சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேரறிவாளனை காவல்துறையினர் அவ்வப்போது அழைத்து சென்று வருகின்றனர்.

இதனால் பேரறிவாளன் தொடர் சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு மேலும் ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மேலும் ஒரு மாதம் 7-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x