Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 4 பேர் கைது :

கோவை: கோவை போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷேக் பக்ருதீன்(47). கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, தண்டனை அனுபவித்தவர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆட்டோ ஓட்டி வந்தார். இரு தினங்களுக்கு முன்னர், போத்தனூரில் உள்ள இறைச்சிக் கடைக்கு, ஆடு ஒன்றை விற்பனைக்காக ஷேக் பக்ருதீன் கொண்டு சென்றார். அப்போது அங்கு வந்த சிலர், ஆட்டை திருடி விற்பனைக்கு எடுத்து வந்ததாக கூறி, ஷேக் பக்ருதீனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து, நஞ்சுண்டாபுரம் இட்டேரியைச் சேர்ந்த அபுதாகீர்(28), இவரது சகோதரர் முகமது அலி (23), நண்பர்கள் முகமது நஜீப்(24), முகமது அன்சா்(24) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x