Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

பெரம்பலூரில் நவ.26-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.  வெங்கடபிரியா தெரிவித்துள்ளதாவது; பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவ.26 அன்று காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நீர்ப்பாசனம், வேளாண்மை சார்ந்த திட்டங்கள், கடன் உதவிகள், இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x