Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

2 தவணை கரோனா தடுப்பூசி கட்டாயம் - வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு :

`திருநெல்வேலியிலுள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரிவோர் அனைவரும் 2 தவணை கரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும்’ என்று, மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழக பொதுசுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி, பொது இடங்களுக்கு வருவோரும், வணிக நிறுவனங்கள், கடைகளில்பணிபுரிவோரும், கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியிருக்க வேண்டும். திருநெல்வேலியில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

`உணவகங்கள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம். அதற்கான சான்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தெரியும் வகையில் தடுப்பூசி செலுத்த வேண்டியது குறித்த நோட்டீஸ்களை வணிக நிறுவனங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என்று, ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x