நவ. 26-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

நவ. 26-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள். எனவே, விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in