Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

சாலையில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு :

தென்காசி, தவளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துஅலி. இவர், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வழியாக சென்றபோது, சாலையோரம் மணி பர்ஸ் கிடந்ததை பார்த்துள்ளார். அதில் ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டு, ரூ.20 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அதனை, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

தென்காசி யானைப்பாலம் அருகே வசித்து வரும் மதன்குமார் என்பவர், தனது தங்கை திருமண செலவுக்காக பணம் எடுத்துச் சென்றபோது, அதனை தவற விட்டது தெரியவந்தது. அவரை வரவழைத்து மணி பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் செயல்பட்ட முத்து அலிக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்து வெகுமதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x