சோழவந்தானில் பலாத்காரம் செய்து பெண் கொலை :

சோழவந்தானில் பலாத்காரம் செய்து பெண்  கொலை :
Updated on
1 min read

மதுரை மாவட்டம், சோழவந் தானில் ஆதரவற்ற மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஜாமீனில் வந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சோழவந்தான் மாணிக்கப் பிள்ளை தெருவைச் சேர்ந்த பெண் திருமலை (75). ஆதர வற்ற நிலையில் இருந்த அவர் கோயில், ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு, தெருவோரங்களில் தூங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் பகுதியிலுள்ள ஜவு ளிக்கடை வாசலில் தூங்கியுள் ளார். அதிகாலையில் அவர் இறந்து கிடப்பது ரோந்து போலீஸாருக்கு தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு விசாரித்தபோது, அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட் படுத்தி கொலை செய்தது தெரி யவந்தது. அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கருப்பட்டியைச் சேர்ந்த மணி மாறன்(25) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் திருட்டு வழக்கில் சிறை சென்றதும் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in