தல்லாகுளம் முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க பயணிகள் சங்கம் வேண்டுகோள் :

தல்லாகுளம் முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க பயணிகள் சங்கம் வேண்டுகோள் :
Updated on
1 min read

கரோனாவையொட்டி எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது கரோனா கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ், விரைவு, முன்பதிவு செய்யப்படாத ரயில்களும் வழக்கம்போல் ஓடுகின்றன. கூட்டம் அதிகரிப்பால், மதுரை ரயில் நிலையத்தின் முன்பதிவு மையத்தில் பயணச் சீட்டு எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கூடுதல் கவுண்ட்டர் அமைக்க வேண்டும்.

மேலும் முன்பதிவு மையத்தில் செயல்பட்ட பயணிகளுக்கான விசாரணை கவுண்ட்டரை திறக்க வேண்டும். முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி கவுண்ட்டரை திறந்து பிற இடையூறை தவிர்க்க வேண்டும். மேற்கு நுழைவு வாயிலிலும், கூடுதல் முன்பதிவு கவுண்ட்டர் திறக்க வேண்டும். தல்லாகுளத்தில் ஏற்கெனவே செயல்பட்ட முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in