Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

நாமக்கல்: நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க நகரத் தலைவர் ஜே.எஸ்.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். விசைத்தறிகளுக்கு மானிய விலையில் அரசு நூல் வழங்க வேண்டும்.

உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க பருத்தி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பி.பெருமாள், நகரச் செயலாளர் கே.பாலுசாமி, துணைத் தலைவர் பி.என்.வெங்கடேசன், உதவி செயலாளர் ஜி.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x