கனமழை காரணமாக : 13 விரைவு ரயில்களின் சேவை ரத்து :

கனமழை காரணமாக : 13 விரைவு ரயில்களின் சேவை ரத்து :
Updated on
1 min read

கனமழை பெய்து தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், 13 விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

அதன்படி, சென்னை எழும்பூர் - ஜோத்பூர் (22663), செங்கல்பட்டு - காகிநாடா (17643), சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா (17238), சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி (12621), சென்னை சென்ட்ரல் - ஹவுரா மெயில் (12840) உட்பட 13 விரைவு ரயில்களின் நேற்றைய சேவை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மழைநீர் வடிந்த பிறகு, பாதுகாப்பு உறுதி செய்த பிறகு படிப்படியாக ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்குவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in