Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

பட்டாசு ஆலை விபத்து உரிமையாளர் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன் :

சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் பலியான வழக்கில் ஆலை உரிமை யாளரின் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை ராஜம்மாள் பட்டாசு ஆலையில் 20.3.2020-ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான ஆலை உரிமை யாளரின் மனைவி செல்வி, ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு: கடந்த அக்.22 முதல் மனுதாரர் நீதிமன்றக் காவலில் உள் ளார். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவர் மீது வேறு வழக்குகள் இல்லை. எனவே இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x