பாமக கொடிக்கம்பம் சேதம்: போலீஸில் புகார் :

பாமக கொடிக்கம்பம் சேதம்: போலீஸில் புகார் :
Updated on
1 min read

கரூர் அருகே பாமக கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் அருகேயுள்ள ஆட்டை யாம்பரப்பில் பாமக கொடிக் கம்பம் இருந்தது. நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரி யாதவர்களால் இந்த கொடிக் கம்பம் சேதப்படுத் தப்பட் டுள்ளது.

இதுகுறித்து பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் நேற்று அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் சேதப்படுத்த கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கொடிக்கம்பம் அமைக் கப்பட்டு கொடியேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in