Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

பெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது :

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி கனகாம்பரம்(30). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவர், நேற்று இருசக்கர வாகனத்தில் கல்பாடி பிரிவு அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், கனகாம்பரம் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார். இந்நிலையில், சங்கிலியைப் பறித்துச் சென்ற தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது(27) என்பவரை திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்து நகையை மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x