கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது :

கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  :
Updated on
1 min read

பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஜெகதீஷ் (24). கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, துரைமுருகன், விஜய், சுடலைமணி, பெனிஸ்டன் ஜோயல் ஆகியோரை பாவூர்சத்திரம் போலீஸார் தேடினர். தூத்துக்குடி அருகே பதுங்கியிருந்த துரைமுருகன் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். பின்னர், விஜய், சுடலைமணி, பெனிஸ்டன் ஜோயல் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதில், கன்னியாகுமரியைச் சேர்ந்த சுடலைமணி (44) என்பவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சுடலைமணி கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in