Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம் :

திருச்சி: திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு ஊஞ்சல் உற்வசம் நாளை(நவ.20) தொடங்குகிறது. இதையொட்டி, நாளை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்வார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருள்வார். பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மூலஸ்தானம் சென்றடைவார்.

இதேபோன்று புறப்பாடு நவ.25-ம் தேதி வரை நடைபெறும். நவ.26-ம் தேதி ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு ஆளும் பல்லக்கில் புறப்பட்டு தாயார் மூலஸ்தானம் சேர்வார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x