Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் வாணியம்பாடி மின் கோட்டத்தைச் சேர்ந்த ஆலங்காயம், திம்மாம்பேட்டை, கேத்தாண்டப்பட்டி, நாட்றாம்பள்ளி, பச்சூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய 8 துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை (20-ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாணியம்பாடி, நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், குருமதெரு, பெத்தவேப்பம்பட்டு, வெள்ளக்குட்டை, கொர்ணாம்பட்டி, குரும்பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங்காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்எம்எஸ் புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரப்பட்டி, பீமகுளம், ஜோலார்பேட்டை, குடியானகுப்பம், ராமரெட்டியூர், சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
மேலும், திம்மாம்பேட்டை, புத்துக்கோயில், பெத்தகல்லுப்பள்ளி, பெரியமோட்டூர், சுகர்மில், கேத்தாண்டப்பட்டி, நாட்றாம்பள்ளி, மல்லகுண்டா, தாசரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத்தூர், காந்திநகர், கண்டம்பட்டி, டோல்கேட், பழையபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என வாணியம்பாடி மின்கோட்ட செயற்பொறியாளர் பாட்சாமுகமது தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT