Published : 17 Nov 2021 03:07 AM
Last Updated : 17 Nov 2021 03:07 AM

மேட்டூர் அணையில் இருந்து 40,000 கனஅடி நீர் வெளியேற்றம் :

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 13-ம் தேதி இரவு முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, நீர்வரத்துக்கு ஏற்ப அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்றும் அதேநிலை நீடித்தது.

அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 120.10 அடியாக இருந்தது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மாலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது. வனப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரியாற்றில் அதிகரித்த நீர்வரத்து தற்போது குறைந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x