Published : 16 Nov 2021 03:08 AM
Last Updated : 16 Nov 2021 03:08 AM

சேலம் அரசு மருத்துவமனையில் - ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை : ஆட்சியர் கார்மேகம் தகவல்

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விழிப்புணர்வு கையேட்டை ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டு பேசியதாவது:

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் துறையின் மூலமாக ஆண்டுக்கு 1 லட்சம் புற நோயாளிகளும், 50 ஆயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். சர்க்கரை நோய்க்கான, அனைத்து சிகிச்சைகளும்சேலம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. தனியார்மருத்துவமனைகளில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும் முழு உடல் பரிசோதனை இம்மருத்துவமனையில் ரூ.250 கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதை ஒரே வளாகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க என்னுடைய சொந்த பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் வழங்குகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் தனபால், சர்க்கரை நோய்த்துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x