Published : 16 Nov 2021 03:09 AM
Last Updated : 16 Nov 2021 03:09 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - சத்துணவு ஊழியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப வெளியிடப்பட்ட அறிக்கை ரத்து : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி பகுதிகளில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்பிட வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட செய்தித்தாளில் 23.09.2020அன்று அறிவிக்கை வெளியிடப் பட்டு, விண்ணப்பங்கள் பெறப் பட்டு, நேர்க்காணல் நடத்தப்பட்டன.

இதையடுத்து கரோனா பரவல்காரணமாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அப்போதைய அரசு அறிவித்தது.

மேற்கண்ட 23.09.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், இந்நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டவையாகும் என ஏற்கெனவே அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் தற்போது ரத்து செய்யப்படுகிறது.

இவ்வறிவிக்கை ரத்து செய்யப்படுவது குறித்து விண்ணப்பத்தாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.

எனவே சத்துணவு அமைப் பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிக்கை பின்னர் தனியே வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x