மன அழுத்தங்களில் இருந்து தப்பிக்க போதைப் பொருள் உதவாது : உயர் நீதிமன்றம் கருத்து

மன அழுத்தங்களில் இருந்து தப்பிக்க போதைப் பொருள் உதவாது :  உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

மது மற்றும் போதைப் பொருட்கள் மன அழுத்தங்களில் இருந்து தப்பிக்க உதவி செய்வதாக நினைப்பது தவறானது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஜாமீன், முன் ஜாமீன் கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்த கருத்து: மன அழுத்தம் மற்றும் பிற துன்பங்களில் இருந்து தப்பிக்க மது, போதை பொருட்கள் உட்கொள்வது தான் சிறந்த வழி என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அவை பிரச்சினைகளை தான் உருவாக்குகின்றன. மது போதையால் வருமானம், உறவுகள், தனி நலனை இழக்க வேண்டியது வரும். இளைஞர்கள் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதற்கு மதுவும், போதைப் பொருட்களும் ஒரு காரணமாக உள்ளது என்று கூறினார்.

பின்னர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை தகுதி அடிப்படையில் விசாரித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in