Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

வருவாய்த் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்ற ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல் :

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மேலக்கோட்டையில் பேருந்து நிழற்குடையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேர்தலில் செலவிட்ட தொகையை வழங்க வேண்டும் என வருவாய்த் துறையினர் போராடுகின்றனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2 ஹெக்டேர் என்ற தேசிய பேரிடர் விதியை தளர்த்தி பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அது மட்டுமின்றி முன்னாள் முதல்வர் கோரியதுபோல், ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உசிலை எம்எல்ஏ ஐயப்பன், ஒன்றியச் செயலாளர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் தமிழழகன், ஒன்றிய சேர்மன் லதா ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x