சீரான குடிநீர் விநியோகம் கோரி சாலை மறியல் :

சீரான குடிநீர் விநியோகம் கோரி சாலை மறியல் :
Updated on
1 min read

பெரம்பலூர் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வன்னிமலை கிரா மத்தில் அடிக்கடி குடிநீர் விநியோகம் தடைபடுவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் நடைபெற்றுவரும் பெரம்பலூர்- துறையூர் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக குடிநீர்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் தடை படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு உயர் அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த இருவாரங்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று பெரம்பலூர்-துறையூர் சாலையில் அம்மாபாளையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in