நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் - சட்ட விழிப்புணர்வு முகாம் :

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நல உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நல உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி மற்றும் அரசு நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் இருப்பிடத்துக்கே கொண்டு சேர்க்கும் வகையில், கடந்த 2-ம் தேதி முதல் நாளை வரை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்ற வளாகத் தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் 21 அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த கண்காட்சி நடத்தப் பட்டது. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 320 பயனாளிகளுக்கு, ரூ.2.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீர் அகமது, ஆட்சியர் வே.விஷ்ணு வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in