கிருஷ்ணகிரியில் பள்ளியில் தேங்கிய மழை நீரால் மாணவர்கள் அவதி :

அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நடந்து சிரமத்துடன் வகுப்பறைகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள்.
அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நடந்து சிரமத்துடன் வகுப்பறைகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் விட்டுவிட்டுப் பெய்த மழையால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

கிருஷ்ணகிரியில் நேற்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்ததால் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி விடுமுறை அறிவித்தார். கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழைவிட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது.

இதனால் 6-ம் வகுப்பு முதல் கல்லூரி வரைக்கும் சிரமத்துடன் மாணவர்கள் சென்று வந்தனர். இதேபோல் பணிக்கு செல்வோர், சாலையோர காய்கறி வியாபாரிகள் என அனைவரும் அவதியுற்றனர்.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இல்லாததால், குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. பழுதான சாலைகள், மண் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியதுடன், நடந்து செல்லவே மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மிமீ) தேன்கனிக்கோட்டை 38, பாரூர் 35.2, ஊத்தங்கரை 33.6, நெடுங்கல் 27.6, அஞ்செட்டி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி தலா 23, தளி 25 , சூளகிரி, கிருஷ்ணகிரியில் 18 மிமீ மழை பதிவாகி இருந்தது.

பள்ளி வளாகம்

தருமபுரியில் கனமழை

கனமழையால் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கத் தொடங்கியது. இரவு முழுக்க பெய்த தொடர் மழை காரணமாக தருமபுரி அடுத்த பாரதிபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in