Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM

மதுரை மாவட்டத்தில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி :

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக இரண்டாவது அலையில் ஆக்ஸிஜன் பற்றாக் குறை, மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இறந்த நோயாளிகள் உடல்களை எரிக்கக்கூட நீண்ட நேரம் மயானங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் இது வரை 20 லட்சத்து 56 ஆயிரத்து 577 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x