Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

சாலை விபத்தில் டைல்ஸ் கல் பதிக்கும் தொழிலாளி உயிரிழப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் டைல்ஸ் கல் பதிக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சுண்டக்காப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அழகிரி (24). கட்டிடங்களுக்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கால்வாய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று அழகிரியின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அழகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x