ரூ.30 ஆயிரம் மதிப்பு லாட்டரி பறிமுதல் :

ரூ.30 ஆயிரம் மதிப்பு லாட்டரி பறிமுதல் :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புளியரை சோதனைச்சாவடியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த, சுரண்டை சிவகுருநாதபுரம் அற்புதமணி மகன் முருகேசன் (66) , ராமசாமி மகன் முருகன் (58 ), விருதுநகர் மாவட்டம் வையாபுரி நாகராஜன் மகன் முருகன் (52 ) ஆகியோரிடமிருந்து, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in