பழுதடைந்த ஷட்டரை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் மனு :

பழுதடைந்த ஷட்டரை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் மனு :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி பேராம்பூரில் பழுதடைந்த ஷட்டர் மற்றும் குழுமியை சீரமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் நேற்று கோரிக்கை மனு அளித்தார்.

பேராம்பூரில் நீர்வள ஆதாரத் துறையின் கீழ் 212 ஏக்கரில் உள்ள பெரியகுளத்தின் ஷட்டர் மற்றும் குழுமி பழுதடைந்துள்ளதால் மழை நீர் வெளியேறுகிறது. இதனால், 380 ஏக்கரிலான பாசனம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வீணாவதைத் தடுப்பதற்காக பழுதடைந்துள்ள ஷட்டர் மற்றும் குழுமியை விரைந்து சீரமைத்துத் தருமாறு புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிடம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ நேற்று மனு அளித்தார். பின்னர், புதுக்கோட்டை அருகே சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கவிநாடு கண்மாயை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in