சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை :

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த செம்பியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் ஞானம்(31). இவர், 2018-ம் ஆண்டு 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுவனின் தாயார் அளித்த புகாரின்பேரில் வெங்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,ஞானத்தை கைது செய்தனர்.

அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஞானத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in