Published : 11 Nov 2021 03:09 AM
Last Updated : 11 Nov 2021 03:09 AM

ரயில்வே கோரிக்கைகளை - வேலூர் எம்.பி.,யிடம் தெரிவிக்க ஏற்பாடு :

ரயில்வே துறை சார்ந்த குறைகள், கோரிக்கைகளை மின்னஞ்சல், வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்கலாம் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தெற்கு ரயில்வே துறை சார்ந்த குறைகள் மற்றும் கோரிக் கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், நான் பங்கேற்க உள்ள நிலையில், வேலூர் நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே துறை சார்ந்த குறைகள், கோரிக்கைகள், ரயில் நிலையங்களில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஆலோசனைகளை velloremp@kathiranand.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் அல்லது 94443-76666 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவும் தெரிவித்தால் அவற்றை தொகுத்து உங்களின் சார்பில் கேள்வி எழுப்பி அதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x