Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM

நாமக்கல் எருமப்பட்டியில் - அரிசி குடோனில் ரூ.3.80 லட்சம் திருட்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த 9 பேர் கைது :

நாமக்கல் அடுத்த எருமப்பட்டி சிங்களகோம்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவருக்கு சொந்தமான அரிசி குடோன் எருமப்பட்டி அருகே பொன்னேரி கைகாட்டியில் உள்ளது.

கடந்த 7-ம் தேதி இவரது அரிசி குடோன் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தது. மேலும், குடோனில் லாக்கரில் இருந்த ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மாயமாகியிருந்தது.

இதுகுறித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் செய்தார். விசாரணையில் ராஜேஷுக்கு சொந்தமான போர்வெல் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சத்தீஸ்கர் சென்ற காவல் துறையினர் நாக்பூர் பேருந்து நிலையத்தில் விமல்யாதவ் (22), குஷால் தர்வோ (27), பிரதீப் (22), சஞ்சய்குமார் (19), ஜித்துகுமார் சூரி (20), தோவானந்த் (23), துளசிந்தா (22), நாதலினந்தீம்(28). லட்சுமண சின்னா (20) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருட்டில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா எனவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x