Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM

சேலம் சிறையில் கைதி தற்கொலை :

தாரமங்கலம் அருகே சிறுமி கொலையான வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

தாரமங்கலம் அடுத்த மாட்டையாம்பட்டி பூவன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (24). அப்பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கில் இவரை கடந்த மாதம் தாரமங்கலம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று சிறை அறையில் தனபால் தூக்கிட்ட நிலையில் இருந்தார். அவரை மீட்ட சிறைக் காவலர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x