அதிக விலைக்கு விதைகளை விற்றால் நடவடிக்கை :

அதிக விலைக்கு விதைகளை விற்றால் நடவடிக்கை :
Updated on
1 min read

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ரா. ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தற்போது பிசான பருவத்துக்கான நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. இப்பருவத்துக்கு தேவையான அளவு விதைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விதை விற்பனையாளர்கள் விற்பனை ரசீதில் ரகம், குவியல் எண், காலாவதி நாள், விற்பனை தொகை போன்றவற்றை கட்டாயம் குறிப்பிட்டு வழங்க வேண்டும். உரிய விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in