Published : 10 Nov 2021 03:08 AM
Last Updated : 10 Nov 2021 03:08 AM

வேலை வாங்கி தருவதாக கூறி - ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது :

வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வரு கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராம நாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர், தனது உறவினரான சுதாகர் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தர முயற்சி செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு கருணாகரனுக்கு வேலூரைச் சேர்ந்த ஜோதிவேல் (49) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது, ஜோதி வேல் தனக்கு வனத்துறையில் அதிகாரிகளை தெரியும். எனவே, சுதாகருக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் செல வாகும் என்றும், பணத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த பால சுப்பிரமணியன் என்பவரின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய கருணாகரன் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.5 லட்சம் பணத்தை பாலசுப்பிரமணியன் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

பணத்தை பெற்ற பால சுப்பிரமணியன், ஜோதிவேல் ஆகி யோர் சொன்னபடி சுதாகருக்கு வனத்துறையில் வேலை வாங்கி தரவில்லை.

இது குறித்து கடந்த மாதம் 25-ம் தேதி திருப்பத்தூர் எஸ்.பி.,அலுவலகத்தில் கருணாகரன் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்த எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் அளித்த உத்தரவின்பேரில் வாணியம்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் கருணாகரனிடம் இருந்து ஜோதிவேல், பாலசுப்பிர மணியன் ஆகியோர் பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து, வேலூரைச் சேர்ந்த ஜோதிவேலை வாணியம் பாடி காவல் துறையினர் நேற்று கைது செய்து, தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x