திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாமில் பெறப்பட்ட - மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு :

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாமில் பெறப்பட்ட -  மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு :
Updated on
1 min read

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:

கணபதிபாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் 196 வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டன. இதில் ஊராட்சியை சேர்ந்த நிலமில்லாத தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் குடும்பங்களை சேர்ந்த 154 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் 72 குடும்பங்களுக்கு பட்டாவுக்கு உரிய இடம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டு, மேற்படி இடத்தில் வசித்து வருகின்றனர். எஞ்சிய 82 குடும்பங்களுக்கு பட்டாவுக்குரிய இடத்தை அளவீடு செய்து தராததால், அவர்களுக்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணிடம் மோசடி

அமைச்சர் உத்தரவு

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திடீரென வந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in