ரூ. 3.63 கோடி கடன் பெற்று மோசடி : 4 பேர் மீது எஸ்.பி.யிடம் புகார்

ரூ. 3.63 கோடி கடன் பெற்று மோசடி  :  4 பேர் மீது எஸ்.பி.யிடம் புகார்
Updated on
1 min read

திருப்பூர் பல்லடம் ராயர்பாளையம் அபிராமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் வசித்து வரும் தம்பதியர் உட்பட 4 பேர் பங்குதாரர்களாக, ரியல் எஸ்டேட், தறி வாங்குதல், விற்பனை செய்தல், சீட்டு நடத்துதல் ஆகிய தொழில்களை செய்து வந்தனர். எங்கள் பகுதியில் வசித்து வரும் 24 பேரிடம், கடனாக பணத்தை பெற்றனர். ஆனால், உரிய தேதியில் பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டனர். ரூ.3 கோடியே 63 லட்சம் வரை பெற்று அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும், என மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in