கரூரில் பாமக ஆர்ப்பாட்டம் :

கரூரில் பாமக ஆர்ப்பாட்டம் :

Published on

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என வலியுறுத்தி கரூர் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in