ஈரோட்டில் இதுவரை 20.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை :

ஈரோட்டில் இதுவரை 20.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20.68 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். இவர்களில் 13.44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், சளி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள்தோறும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் இதுவரை 20 லட்சத்து 68 ஆயிரத்து 10 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in