திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இளைஞர் கொலை :

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இளைஞர் கொலை :
Updated on
1 min read

விசாரணையில், இறந்தவர் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அர்ஜுனன் (38) என்பதும். திருப்பூரில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. அவரைக் கொலை செய்தவர் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்பரசன் (20) என தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இக்கொலை நிகழ்ந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பிரான்சிஸ் அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in