அணைகளை கண்காணிக்க உதயகுமார் வலியுறுத்தல் :

சாப்டூர் ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தனர்.
சாப்டூர் ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தனர்.
Updated on
1 min read

இதில் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது: பருவ மழை தொடங்கியதால் தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் அவற்றை கண்காணிக்க வேண்டும். மனித உயிரிழப்பு, கால்நடை சேதத்தை தடுக்க வேண்டும். குறிப்பாக கரோனா, சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா நோய்த் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பயிர் சேதம் கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஐயப்பன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ நீதிபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in