விதி மீறி பட்டாசு வெடித்த 5 பேர் கைது :

விதி மீறி பட்டாசு வெடித்த 5 பேர் கைது :
Updated on
1 min read

கரூர் திருமாநிலையூர் காமராஜ் நகரில் தீபாவளியன்று விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சுக்காலியூர் சாலைபுதூரைச் சேர்ந்த சாமிவளவன்(23), திருமாநிலையூர் கொடியரசு(20) ஆகியோர் மீது தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

அதேபோல, கடந்த 5-ம் தேதி விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக அரவக்குறிச்சி புதுத்தெருவைச் சேர்ந்த தினேஷ்வரனை(26) அரவக்குறிச்சி போலீஸாரும், வேலாயுதம்பாளையம் டிஎன்பிஎல் சாலையைச் சேர்ந்த ரகுவரன்(31), வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை வேலாயுதம்பாளையம் போலீஸாரும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in