மீறி பட்டாசு வெடித்ததாக 97 பேர் கைது :

மீறி பட்டாசு வெடித்ததாக 97 பேர் கைது :
Updated on
1 min read

தீபாவளி பண்டிகை தினத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் தூத்துக்குடி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 97 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். குடிபோதையில் வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in