Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் மீட்பு உபகரணங்கள் :

கடலூர் மாவட்டத்தில் உள்ளஅனைத்து காவல் நிலையங்களில் வடகிழக்கு பருவமழை யையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு உபகரணங் கள் தயார் நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் அனைத்து காவல்நிலையங்களில் உள்ள காவல்அதிகாரிகளும் வடகிழக்கு பருவ மழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 42காவல்நிலையங்களிலும் போலீ ஸார் தயார் நிலையில் உள்ளனர்.

பொக்லைன் இயந்திரம், கயிறு,மண்வெட்டி உள்ளிட்ட மீட்பு உபகரணங்களை தயார் நிலையில்வைத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நீர்நிலை களை கண்காணித்து வருகிறார்கள். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தென்பெண்ணையாறு- கும்தா மேடு தரைப்பாலம் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் கதிரவன், ராஜேந்திரன் மற்றும் போலீஸார் ஆகியோர் கொண்ட குழுவினர் பாலத்தின் தென்புறம் பேரிகார்டு அமைத்துள்ளனர். கும்தாமேடு தரைப்பாலம் வழியாக பயணம் செய்தால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். தரைப்பாலத்தில் மீது பயணம் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரிக்கை செய்து மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x