Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

புதுச்சேரியில் 29 பேருக்கு கரோனா :

புதுச்சேரி மாநிலத்தில் 2,454 பேருக்குபுதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில்-9, காரைக்காலில்-8, ஏனாமில்-4, மாஹேவில்-8 பேர் என மொத்தம் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 73 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 286 பேரும் என மொத்தமாக 359 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,859 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x