பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு  :
Updated on
1 min read

பவானிசாகர் அணையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 105 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்பதால், உபரி நீர் திறக்கப்படாமல் நீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதனால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 5022 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர் மட்டம் 102.20 அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி, கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in