Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் :

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் ஆ.தமிழரசி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜ.ஜெய ராஜ் கோரிக்கை விளக்க உரை யாற்றினார்.

கரூர், தாந்தோணி ஒன்றியங் களில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை விதிமுறை களுக்கு புறம்பாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுப் பணி ஆணை வழங்கியதை ரத்து செய்ய ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x