Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

அனைத்து ஆத்மாக்கள் தினம் - கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை :

திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களால் அனைத்து ஆத்மாக்கள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கிறிஸ்தவர்களால் அனைத்து ஆத்மாக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தங்கள் முன்னோர் களின் கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவர். அந்தவகையில் கிறிஸ்தவர்களால் அனைத்து ஆத்மாக்கள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையிலுள்ள சிஎஸ்ஐ மற்றும் ஆர்.சி. கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அங்கு அருட்தந்தையர்கள் சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x