உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் கடை சூறை :

உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் கடை சூறை :
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன்கடையை சூறையாடிய இளைஞரை போலீஸார் தேடி வருகின் றனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் பு.மாம்பாக்கம் கிராமத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் சென்றுள்ளார். அப்போது கடை விற்பனையாளர் ராஜகோபாலிடம் கூடுதலாக துவரம்பருப்பு கேட்ட தாகத் தெரிகிறது. அதற்கு விற் பனையாளர் மறுத்துள்ளார். இத னால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். சிறிதுநேரம் கழித்து மீண்டும்கடைக்குச் சென்ற வேலு, பூட்டியநிலையில் இருந்த கடையை உடைத்து சேதப்படுத்தியாக கூறப்படுகிறது. இதையறிந்த விற்பனை யாளர் ராஜகோபால், அது தொடர் பாக உளுந்தூர்பேட்டைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in