Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

செர்பியா சர்வதேச சதுரங்கப் போட்டி கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் :

செர்பியாவில் நடந்தசர்வதேச சதுரங்கப் போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் வெற்றி பெற்றார்.

ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன், சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார். செர்பியாவில் கடந்த 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடந்த 5-வது ருஜனா சோரா சதுரங்கப் போட்டியில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 10 சர்வதேச வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் இனியன் பங்கேற்றார்.

கிளாசிகல் பிரிவில் 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், கிராண்ட் மாஸ்டர் இனியன் 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 4 போட்டிகளைச் சமன் செய்து 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் ரஷ்ய வீரர் மகரின் ரூடிக் இரண்டாமிடம் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x