Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

அனுமதியின்றி முதியோர் இல்லம் நடத்தியவர் மீது வழக்குப் பதிவு :

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே அனுமதியின்றி முதியோர் இல்லம் நடத்தியவர் மீது காவல் நிலையத் தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அறந்தாங்கி அருகே அழியா நிலை மற்றும் குரும்பூர் ஆகிய 2 இடங்களில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட தனியார் முதியோர் இல்லங்கள் 2 தினங்களுக்கு முன்பு ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் மூடி, சீல் வைக்கப்பட்டன. மேலும், 2 இல்லங்களிலும் தங்கியிருந்த 127 பேர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனை வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அனுமதியின்றி இல்லம் நடத்தியதாக வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த எம்.சந்திரசேகரன் மீது 3 பிரிவுகளின் கீழ் அறந்தாங்கி காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x